திருவள்ளூரில் இன்று 25 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

திருவள்ளூரில் இன்று 25 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?
திருவள்ளூரில் இன்று 25 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா உறுதியாகியதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 646 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் தெலங்கானாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.

அரியலூர் - 1, செங்கல்பட்டு - 23, கடலூர் - 8, தருமபுரி - 2, திண்டுக்கல் - 1, கள்ளக்குறிச்சி - 8, காஞ்சிபுரம் - 13, கன்னியாகுமரி - 4, கிருஷ்ணகிரி - 2, மதுரை - 2, ராமநாதபுரம் - 1, ராணிப்பேட்டை - 1, சேலம் - 10, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 25, திருவண்ணாமலை - 14, தூத்துக்குடி - 9, வேலூர் - 3, விருதுநகர் - 1 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இதுதவிர ரயில்வே தனிமை வார்டில் இருந்த 1 மற்றும் விமான நிலைய தனிமை வார்டில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 8,256 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 127 பேர் பலியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com