வேலூர் மாநகராட்சியின் 18வது வார்டில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சியின் 18வது வார்டில் பாஜக சார்பில் சுமதி என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மதிமுகவைச் சேர்ந்த மேகலா என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், வாக்குகளை குறைத்துவிட்டதாக பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தியதால், 18வது வார்டில் வெற்றி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.