செல்போன் சார்ஜ் போட்டபோது நேர்ந்த பரிதாபம்.. 17 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்

செல்போன் சார்ஜ் போட்டபோது நேர்ந்த பரிதாபம்.. 17 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்
செல்போன் சார்ஜ் போட்டபோது நேர்ந்த பரிதாபம்.. 17 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்

சென்னை கொடுங்கையூரில் செல்போன் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் என்ற 17 வயது சிறுவன், சென்னை கொடுங்கையூரில் உறவினர் வீட்டில் தங்கி, மூலக்கடையில் பழரச கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஜங்ஷன் பாக்ஸ் மூலமாக செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். வீட்டின் அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து சடலத்தை சஞ்சயின் பெரியம்மா மகன் ரமேஷ் என்பவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். உடற்கூறு ஆய்வு செய்யாமல் எடுத்துச் சென்ற காரணத்தினால், மீண்டும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு சிறுவன் சஞ்சயின் உடல் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com