கடையில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : உரிமையாளர் போக்சோவில் கைது

கடையில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : உரிமையாளர் போக்சோவில் கைது
கடையில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : உரிமையாளர் போக்சோவில் கைது

கோவையில் மளிகைக் கடையில் பணிபுரிந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கோவை பி.என்.பதூர் பகுதியில் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்குமுன் சிறுமியியை அவரது உறவினர், அதேபகுதியில் இயங்கி வரும் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் வேலைக்காக சேர்த்துள்ளார். கடந்த சில நாட்களாக கடைக்கு வாடிக்கையாளர்கள் வராதபோது, கடையின் உரிமையாளர் ராமலிங்கம் சிறுமியிடம் வன்புணர்வை தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக சிறுமி தனது உறவினரிடம் கூற, அந்த உறவினர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவுசெய்த போலீசார், ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com