வெறிநாய்கள் கடித்து 15 பேர் படுகாயம் : தேனியில் மக்கள் அச்சம்..!

வெறிநாய்கள் கடித்து 15 பேர் படுகாயம் : தேனியில் மக்கள் அச்சம்..!
வெறிநாய்கள் கடித்து 15 பேர் படுகாயம் : தேனியில் மக்கள் அச்சம்..!

தேனியில் வெறிநாய்கள் கடித்து ஒரே நாளில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு மற்றும் வேலம்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலைகளில் செல்லும் மக்களுக்கு அச்சுத்தறுத்தலாக இருந்து வந்துள்ளன. இந்நிலையில் சாலை மற்றும் பொது இடங்களில் சென்ற 15 பேரை வெறிநாய்கள் கடித்துள்ளன. இதில் பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

நாய்கள் கடித்தால் படுகாயமடைந்த 15 பேர் தற்போது கடமலைக்குண்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாய்க்கடிக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் திரியும் வெறிநாய்களை உடனே பிடித்து, நாய் பராமரிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com