செங்கல்பட்டில் இன்று 127 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 127 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 16,829 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 15,456 நபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1,153 ஆண்கள், 722 பெண்கள் ஆவர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்து 1,372 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,398 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
அரியலூர் - 3, செங்கல்பட்டு - 127, கோவை - 3, கடலூர் - 19, தருமபுரி - 1, திண்டுக்கல் - 11, கள்ளக்குறிச்சி - 4, காஞ்சிபுரம் - 19, கன்னியாகுமரி - 3, மதுரை - 20, நாகை - 16, நாமக்கல் - 1, பெரம்பலூர் - 2, புதுக்கோட்டை - 2, ராமநாதபுரம் - 10, ராணிப்பேட்டை - 26, சேலம் - 10, சிவகங்கை - 7, தென்காசி - 5, தஞ்சை - 8, தேனி - 3, திருப்பத்தூர் - 4, திருவள்ளூர் - 72, திருவண்ணாமலை - 20, திருவாரூர் - 16, தூத்துக்குடி - 6, நெல்லை - 3, திருச்சி - 10, வேலூர் - 12, விழுப்புரம் - 7, விருதுநகர் - 2 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாட்டு விமான நிலைய தனிமை வார்டில் 10, உள்நாட்டு விமான நிலைய தனிமை வார்டில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 20,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 349 பேர் பலியாகியுள்ளனர்.