"அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட்டால் 100% வெற்றி" - முன்னாள் அமைச்சர் வேலுமணி நம்பிக்கை

"அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட்டால் 100% வெற்றி" - முன்னாள் அமைச்சர் வேலுமணி நம்பிக்கை
"அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட்டால் 100% வெற்றி" - முன்னாள் அமைச்சர் வேலுமணி நம்பிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நூறு விழுக்காடு வெற்றி பெறலாம் என்று முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பேசிய வேலுமணி, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து பணியாற்றினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 100 சதவிகிதம் வென்றது போல், வெற்றியை வசப்படுத்த முடியும் என்று கூறினார். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக்கொடுத்து வெற்றி பெற்றதை எடுத்துக் கூறினாலே அதிமுகவுக்கு வெற்றி எளிதாகவிடும் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com