”ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை புதுச்சேரியில் ஆல் பாஸ்” ஆளுநர் தமிழிசை உத்தரவு

”ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை புதுச்சேரியில் ஆல் பாஸ்” ஆளுநர் தமிழிசை உத்தரவு
”ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை புதுச்சேரியில் ஆல் பாஸ்” ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள மாணவர்கள் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com