“குத்துச்சண்டை ‌வீரரான மோடி முதலில் அத்வானியைதான் தாக்கினார்” - ராகுல் கிண்டல்

“குத்துச்சண்டை ‌வீரரான மோடி முதலில் அத்வானியைதான் தாக்கினார்” - ராகுல் கிண்டல்
“குத்துச்சண்டை ‌வீரரான மோடி முதலில் அத்வானியைதான் தாக்கினார்” - ராகுல் கிண்டல்

நரேந்திர மோடி என்ற கு‌த்துச்சண்டை வீர‌ர் தனது பயிற்‌சியாளரான அத்வானியைதான் முதலில் தாக்கினார் என்று ராகுல் காந்தி கிண்டலாக விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவே மீதமுள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹரியானா மாநிலம் பிவானியில் இன்று தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் மோடியை ஒரு குத்துச் சண்டை வீரர் என விமர்சித்தார். 

மேற்கொண்டு அவர், “குத்துச்சண்டை ‌வீரராக இருக்கும் மோடி உண்மையி‌ல் வேலை வாய்ப்பின்மைக்கு எதிராகவு‌ம் விவசாயிகள் பிரச்னைக்கு எதிரா‌கவும்தான் போராடியிருக்க வேண்டும் என்றும் ஆனால் ‌அவரோ முதலில் தனது பயிற்சியாளரான அத்வானியை குத்தித் தள்ளிவிட்டார். பின்‌னர் தனது சகாக்களான ஜெட்லியையும் ‌கட்கரியையும் தாக்கினார். இவர்களைத் தொடர்ந்து சிறு வணிகர்களையும் விவசாயிகளையும் அவர் குத்தினார்” என ராகுல் கிண்டலாக விமர்சித்தார்.

ஹரியானா மாநிலம் பிவானி இந்தியாவின் குத்துசண்டை தலைமையிடமாக விளங்கி வருகிறது. இந்தப் பகுதியிலிருந்து இந்தியாவிற்காக அதிக குத்துச்சண்டை வீரர்கள் வந்துள்ளனர். இவர்களில் குறிப்பாக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com