இறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை

இறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை

இறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை
Published on

சந்திராயன்-2 விண்கலத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 விண்கலம், நிலவிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைகொண்டு ரோவர் என்ற வாகனத்தின் உதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று விளக்கினார்.

சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ஆதித்யா என்னும் செயற்கைகோளை வடிவமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com