கொடைக்கானலில் தெரிந்த சூரிய கிரகணம் - கண்டு ரசித்த மக்கள்

கொடைக்கானலில் தெரிந்த சூரிய கிரகணம் - கண்டு ரசித்த மக்கள்
கொடைக்கானலில் தெரிந்த சூரிய கிரகணம் -  கண்டு ரசித்த மக்கள்

கொடைக்கானலில் தெரிந்த சூரிய கிரகணத்தை பலரும் கண்டு ரசித்தனர்.

இன்று நிகழ்ந்த வளைய சூரிய கிரகணம் தமிழக பகுதிகளில் தென்பட்டது. இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில், விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். சூரிய ஆராய்ச்சி கூடத்தில் உள்ள ஐந்து தொலைநோக்கிகள் வழியாக, விஞ்ஞானிகள் கிரகணத்தை பதிவு செய்து ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில்  மேக மூட்டங்களுக்கு நடுவே தென்பட்ட கிரகணத்தை, புகைப்படங்கள் மற்றும் ஒளிக்காட்சிகள் மூலம் பதிவு செய்து ஆய்வு செய்ததாக தலைமை விஞ்ஞானி எபினேசர் தெரிவித்தார். இந்த கிரகணத்தை காண  வான் இயலில் ஆர்வமுள்ளவர்கள் சூரியக்கண்ணாடி மூலமாக ஆய்வகத்திற்கு வெளியில் நின்று கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com