மனிதக் குலத்திற்கே அச்சுறுத்தலாகியுள்ள கொரோனா வைரஸை ஆய்வகத்தில் உருவாக்கித் திட்டமிட்டே சீனா பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனைச் சீனா மறுத்து வந்த நிலையில், எய்ட்ஸுக்கான மருந்து கண்டறியும் போது, ஏற்பட்ட விபத்தில் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி லுக் மோன்டாங்னியர் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி.யை கண்டறிந்ததற்காக லுக் மோன்டாங்னியருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொரோனா வைரஸை ஆராயும் போது, அதில் எச்.ஐ.வி.யின் தன்மை இருப்பதாகவும், மலேரியா கிருமியின் தாக்கம் இருப்பதாகவும் மோன்டாங்னியர் கூறியுள்ளார். மோன்டாங்னியரின் கூற்றுப்படி எச்.ஐ.வி வைரஸின் தோலும்,கோவிட் 19 வைரஸின் தோலும் ஒரே தன்மையில் இருப்பதால் மட்டுமே அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது எனக் கூற முடியாது என்கிறார் முதுநிலை விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்.