ராமன் விளைவு என்றால் என்ன ? இன்று தேசிய அறிவியல் தினம்

ராமன் விளைவு என்றால் என்ன ? இன்று தேசிய அறிவியல் தினம்
ராமன் விளைவு என்றால் என்ன ? இன்று தேசிய அறிவியல் தினம்

தமிழ்நாட்டில் நவம்பர் 7,1888 ஆம் ஆண்டில் பிறந்த சி.வி.ராமன் (C.V. Raman ). இவர் இயற்பியல் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். அவரது ராமன் விளைவுக்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். அதன் பிறகு சி.வி.ராமன் அவர்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதினை 1954 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது. இவர் பிப்ரவரி 28,1928ல் ராமன் விளைவு என்னும் அறிவியல் கூற்றை கண்டுபிடித்தார். அதனை நினைவு கூறும் வகையில், இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக (National Science Day) கொண்டாடப்படுகிறது. 

ராமன் விளைவு நினைவாக பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்தியா அரசு 1987 ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்த தேசிய அறிவியல் தினத்தில் அறிவியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் விதமாக தேசிய அறிவியல் தினத்தன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பல அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் புது கண்டுப்பிடிப்புகளை தேசிய அறிவியல் தினத்தில் நடக்கும் கண்காட்சியில் விவரிப்பார்கள்.ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினத்திற்கு ஒரு தீம் வைப்பார்கள். அவ்வாறு இந்த ஆண்டு, ‘மக்களுக்காக அறிவியல், அறிவியலுக்காக மக்கள்' என்னும் தீம் வைக்கப்பட்டுள்ளது.

ராமன் விளைவு:
ராமன் விளைவு ஒளியின் அலைநீளத்தில்(wavelength) ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. அதாவது ஒளிக்கற்றை ஒரு தூசியற்ற சாதனத்திற்குள் நுழைந்தால் அதன் ஒளிக்கற்றிலிருந்து சிறிய அளவிலான ஒளிசிதறல்கள் ஏற்படும். இந்த சிறிய ஒளிசிதறல்களின் அலைநீளம் உள்ளே அனுப்பப்பட்ட ஒளியின் அலைநீளத்தில் இருந்து சற்று மாறுபடும். இந்த மாற்றத்தை தான் ராமன் விளைவாக சி.வி.ராமன் கண்டுபிடித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com