செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ரூ.1500 ஜியோ போன் டெலிவரி

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ரூ.1500 ஜியோ போன் டெலிவரி
செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ரூ.1500 ஜியோ போன் டெலிவரி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.1500 ஜியோ போன் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நோக்கில் ஜியோ ஃபோனை வாடிக்கையாளர்கள், 1,500 ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்க முடியும் என அறிவித்து இருந்தது. இந்த புதிய ஜியோ ஃபோனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புக்கிங் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. ஜியோ ஃபோனை ஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக முன்பணமாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம். அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம் என ஜியோ நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இதுவரை 60 லட்சம் பேர் ஜியோ போன் புக் செய்துள்ள நிலையில், வரும் 21ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜியோ போன் புக் செய்தவர்களுக்கு இந்த மொபைல் டெலிவரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்தும் 1500 ரூபாயை, மூன்றாண்டுகளுக்கு பிறகு ஃபோனை ஜியோ நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com