சில செயலிகளை தடை செய்ய தயங்குவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

சில செயலிகளை தடை செய்ய தயங்குவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

சில செயலிகளை தடை செய்ய தயங்குவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

சீனா தயாரித்த பல செயலிகளுக்கு அந்நாட்டிலேயே தடை இருக்கும்போது, இந்திய அரசு மட்டும் சில செயலிகளுக்கு தடை விதிக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் வினவியுள்ளனர்.

Parentel window மென்பொருள் பயன்பாடு மூலம் சிறுவர்கள் தவறான இணையதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். எனவே, அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல கோடி பயனாளர்கள் இருப்பதால் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பது எளிதானது அல்ல என செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், நீதிமன்றம் எவ்வித உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதனை பின்பற்ற தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சீனா தயாரித்த பல செயலிகளை உலகம் முழுவதும் புழக்கத்தில் விட்டாலும் சில செயலிகளுக்கு சொந்த நாட்டிலேயே தடை விதித்தும், கண்காணித்தும் வருவதாக குறிப்பிட்டனர். ஆனால், இந்தியாவில் மட்டும் சில செயலிகளுக்கு தடை விதிக்கவும், கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளியாகும் அடுத்த நாளே இணையத்தில் வெளியாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் அதனை கட்டுப்படுத்த முடியாதா எனவும் கேள்வி எழுப்பினர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com