சந்திராயனை சுமந்துச் செல்ல தயார் நிலையில் மார்க் 3 ராக்கெட் !

சந்திராயனை சுமந்துச் செல்ல தயார் நிலையில் மார்க் 3 ராக்கெட் !
சந்திராயனை சுமந்துச் செல்ல தயார் நிலையில் மார்க் 3 ராக்கெட் !

சந்திராயன்-II விண்கலம் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,877 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது.

இதில் ஆர்பிட்டர் 2379 கிலோ எடையும், லேண்டர் விக்ரம் 1471 கிலோ எடையும், ரோவர் பிரக்யான் 27 கிலோ எடைக் கொண்டதாகவும் இருக்கும். இது அத்தனையும் சேர்த்து 3,877 கிலோ எடைக் கொண்ட விண்கலத்தை, மார்க் 3 ராக்கெட் கொண்டு செல்லவுள்ளது. இப்போது ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் மார்க் 3 ராக்கெட் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்தில் இருந்துதான் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவுள்ளது.

இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் மார்க் வகைக்கொண்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதில் எடைக் குறைந்த ராக்கெட்டுகளை பி.எஸ்.எல்.வி. மூலமாகவும், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாகவும், இன்னும் கூடதலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை கிட்டத் தட்ட 3000 முதல் 4000 கிடோ எடைக் கொண்ட செயற்கைக்கோள்களை மார்க் 3 ராக்கெட் மூலமாகவும் ஏவி வருகிறது.

எனவே அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் மிக பலமான ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கின்றனர். இஸ்ரோவின் முதல் ராக்கெட்டான எஸ்எல்வி - 3 உயரம் 22.7 மீட்டர், 40 கிலோ எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருந்தது. இதற்கடுத்து ஏஎஸ்எல்வி ராக்கெட் 23.5 மீட்டர் உயரமும் 150 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்றது. அதன் பின்பு, இஸ்ரோ தனது முயற்சியில் ஒரே பாய்ச்சலாக பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரித்தது அவை 44 மீட்டர் உயரமும், 1860 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. 

இஸ்ரோ விண்ணில் பல சாதனைகளை நிகழ்த்தியது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகத்தான். இதற்கடுத்து ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டுகளை தயாரித்தது. இது இஸ்ரோவின் தயாரிப்பிலேயே அதிக உயரம் கொண்டது, இது 49 மீட்டர் உயர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மேலும் 2200 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டது. இப்போது ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com