ஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..!

ஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..!

ஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..!
Published on

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், நேரடியாக ஒளிபரப்பு ‌(லைவ்) செய்யும் வசதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் விதித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் முக்கியமான ஊடகமாக உள்ளது. கோடிக் கணக்கானவர்கள் ஃபேஸ்புக்கில் இயங்கி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் தங்களுக்கு பிடித்தமானவர்களின் படங்களை பதிவிடுகின்றனர். மேலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் வசதியை சமீபகாலமாக முகநூலில் பலர் பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். மசூதிக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை லைவ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பட்டதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஃபேஸ்புக்கில், நேரடியாக ஒளிபரப்பு செய்யும் வசதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது. மக்களிடையே வெறுப்பை பரப்ப ஃபேஸ்புக்‌ சேவைகள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவன துணைத்தலைவர் கய் ரோஸன் கூறியுள்ளார். மேலும் கொடூரமான படங்கள், வீடியோ பகிரப்படுவதை தடுக்கும் வகையிலும், ஃபேஸ்புக் விதிகளை மீறியவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை தடுப்பது உள்ளிட்ட வகையிலும் பல கட்டுப்பாடுகளை  பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி விதிகளை மீறி சர்ச்சைக்குரிய நேரலை பதிவுகளை வெளியிடுவோர் மற்றும் அந்த பதிவுகளை பகிர்வோர்களின் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com