நிறவெறி கருத்துக்களுக்கு ஃபேஸ்புக்கில் தடை! - புதிய கட்டுப்பாடு

நிறவெறி கருத்துக்களுக்கு ஃபேஸ்புக்கில் தடை! - புதிய கட்டுப்பாடு
நிறவெறி கருத்துக்களுக்கு ஃபேஸ்புக்கில் தடை! - புதிய கட்டுப்பாடு

பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடைசெய்ய ஃபேஸ்புக் புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது.

சமீப காலமாக இன,மத அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் வலம்வர தொடங்கியள்ளன. அந்தக் கருத்துகளின் தாக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்த் மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் இனவெறியர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் லைவாக பகிரப்பட்டது. இதனை உடனே ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தளத்தில் இருந்து நீக்கியது. 

இந்நிலையில் ஃபேஸ்புக் தற்போது பன்மைத்துவ தேசியவாத்திற்கு எதிரான கருத்துக்களை தடை செய்ய புதிய கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கொள்கையை வடிவமைக்க உதவிய கிறிஸ்டேன் கிளார்க், “ஃபேஸ்புக்கின் முந்தைய  கொள்கையில் சில தவறுகள் இருந்தன. அதனை தற்போது வடிவமைத்துள்ள கொள்கையில் மாற்றியுள்ளோம்” எனத்  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம், “தற்போது இனவெறி தொடர்பான கருத்துக்களை தேடும் நபர்களை ‘லைஃப் ஆஃப்டர் ஹேட்’ என்ற தன்னார்வு அமைப்பின் பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். இனி ஃபேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது. இந்தப் புதிய கொள்கை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com