டெக்
நிலவில் பிரக்யான் ரோவரின் சாமர்த்தியம்.. ISRO வெளியிட்ட தகவல்!
நிலவை ஆய்வுசெய்து வரும் பிரக்யான் ரோவர், நிலவின் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
41 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான் 3 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், கடந்த 23ஆம் தேதி மாலையில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரக்யான் ரோவர், நிலவின் தரைப்பரப்பில் தடம்பதித்து, தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

Chandrayaan 3Puthiya thalaimurai
இந்நிலையில், நேற்று நிலவில் தனக்கு முன் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை ரோவர் கண்டதாகவும், பூமியில் இருந்து அனுப்பப்பட்ட கட்டளைக்கு ஏற்ப தனது பாதையை மாற்றியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது ரோவர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.