சந்திரயான்-2வின் ஆர்பிட்டர் மூலம் 95% ஆய்வுகள் நடத்தப்படும்- இஸ்ரோ

சந்திரயான்-2வின் ஆர்பிட்டர் மூலம் 95% ஆய்வுகள் நடத்தப்படும்- இஸ்ரோ
சந்திரயான்-2வின் ஆர்பிட்டர் மூலம் 95% ஆய்வுகள் நடத்தப்படும்- இஸ்ரோ

சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் நிலவில் பிற ஆய்வுகளை தொடர உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. திட்டமிட்டப்படி இந்த விண்கலம் பூமியை சுற்றி வந்த நிலையில் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு படிப்படியாக பாதை திருப்பிவிடப்பட்டது. பூமியில் இருந்து அதிக தொலைவு கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான்-2 விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்த மாதம் 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது.லேண்டரின் வேகத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்து வந்தனர். எனினும் லேண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை.எனவே இந்தத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர் இன்னும் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த ஆர்பிட்டரை வைத்து நிலவில் 95% சதவிகிதம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் மூலம் நிலவிலுள்ள சூழல்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.  ஆகவே சந்திரயான் -2 விண்கலத்தின் ஒரு பகுதியான லேண்டரை தரையிறக்கும் பணி மட்டுமே தற்போது தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிகிறது. மொத்த சந்திரயான்-2 விண்கல திட்டமும் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com