நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3ஆம் நிலைக்கு முன்னேறிய சந்திரயான்2 

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3ஆம் நிலைக்கு முன்னேறிய சந்திரயான்2 

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3ஆம் நிலைக்கு முன்னேறிய சந்திரயான்2 
Published on

சந்திரயான்2 நிலவின் சுற்றுவட்டாரப் பாதையில் 3ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. 

இந்நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் மூன்றாவது முறையாக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி அடுத்த மாற்றம் நிகழும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதி, சந்திரயான் 2 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் இறங்கி நிலவிலுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com