நிலவில் புதிய வாயுவை கண்டறிந்த சந்திரயான் 2

நிலவில் புதிய வாயுவை கண்டறிந்த சந்திரயான் 2
நிலவில் புதிய வாயுவை கண்டறிந்த சந்திரயான் 2

நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திரயான் 2 விண்கலம் உறுதிபடுத்தியுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2வின் விக்ரம் லேண்டர் செயலிழந்தாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ் 2 என்ற கருவி உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடியது என்றும், பூமியில் அரிதாக காணப்படும் வாயுவில் ஆர்கான் 40தும் ஒன்று என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com