இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி!

இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி!
இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி!

இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி உத்தராகண்ட் மாநிலத்தின் தேவஸ்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டின் இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலையின் மேல், வானத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு வகையான திரவ-கண்ணாடி தொலைநோக்கியை வைத்துள்ளனர்.

பல விண்மீன் திரள்கள் மற்றும் பிற வானியல் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் இந்த தொலைநோக்கியை வைத்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2 ஆயிரத்து 450 மீட்டர் உயரத்தில் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் தேவஸ்தல் கண்காணிப்பு வளாகத்தில் இது அமைந்துள்ளது.

இந்தியா, பெல்ஜியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த வானியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியானது ஒளியைச் சேகரித்து குவிப்பதற்கு திரவ பாதரசத்தின் மெல்லிய படலத்தால் ஆன 4 மீட்டர் விட்டம் கொண்ட சுழலும் கண்ணாடியைப் பயன்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com