ஜியோ வாடிக்கையாளர் ‌விவரங்கள் கசிந்த விவகாரம்... விளக்கம் கேட்டது தொலைத்தொடர்புத்துறை

ஜியோ வாடிக்கையாளர் ‌விவரங்கள் கசிந்த விவகாரம்... விளக்கம் கேட்டது தொலைத்தொடர்புத்துறை

ஜியோ வாடிக்கையாளர் ‌விவரங்கள் கசிந்த விவகாரம்... விளக்கம் கேட்டது தொலைத்தொடர்புத்துறை
Published on

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்‌கள் கசிந்த‌ விவகாரம் குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொட‌ர்புத் துறை செயலாளர் தெரிவித்தார். 

சுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிட்டதாக  ஜியோ நிறுவனத்தின் மீது கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்படி, ஜியோ வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் வட்டம் (பகுதி) உள்ளிட்ட தகவல்கள் வெளியானதாக கூறப்பட்டது. இந்நிலையில், தங்கள் வாடிக்கையாளர்களின் செல்ஃபோன் எண் உள்ளிட்ட தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அது வெளியில் கசியவில்லை என்றும் ரிலையன்ஸ் ஜியோ ‌மறுத்திருந்தது. இதற்கிடையில் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களின் த‌கவல்களை க‌சிய விட்ட விவகாரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த இம்ரான் சிப்பா என்ற தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்‌கள் வலைத்தளத்தில் கசிந்த‌ விவகாரம் குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொட‌ர்புத் துறை செயலாளர் அருண் சுந்தரராஜன் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com