மானுட மாற்றத்தின் ஆணிவேர்களான ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் சமூக அக்கறையோடு திகழும் செய்தி ஊடகமான "புதிய தலைமுறை" குழுமம், "கனவு ஆசிரியர்" என்ற அமைப்போடு இணைந்து "புதிய தலைமுறை ஆசிரியர் விருது " என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
ஆசிரியர்களை மதித்து அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தும் போது சமூகமும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதுகளை வழங்கி உலகிற்கு அடையாளப்படுத்தும் முயற்சியே "புதிய தலைமுறை ஆசிரியர் விருது".
