பொட்டல்காட்டில் கேரம்போர்டு விளையாடிய இளைஞர்கள்: ட்ரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம்

பொட்டல்காட்டில் கேரம்போர்டு விளையாடிய இளைஞர்கள்: ட்ரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம்
பொட்டல்காட்டில் கேரம்போர்டு விளையாடிய இளைஞர்கள்: ட்ரோன் கேமராவை பார்த்ததும் ஓட்டம்

திருப்பூரில் காவல்துறையினர் ட்ரோன் கேமரா கண்காணிப்பில் ஈடுபட்டபோது பொட்டல்காட்டில் கேரம்போர்டு விளையாடிய இளைஞர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓடினர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டத்தை காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வரும் சூழலில் கேமராவை பார்த்ததும் கேரம் விளையாடிய இளைஞர்களில் ஒருவர் மட்டும் கேரம் போர்டினை எடுத்துச் சென்று தன் முகம் தெரியாதவாறு மறைந்துக் கொண்டு அமர்கிறார். அந்த நபர் மீண்டும் அலறிஅடித்து ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்த காட்சியை பதிவு செய்த காவல்துறையினர் பொது மக்களின் விழிப்புணர்வுக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com