காதலி இறந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

காதலி இறந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
காதலி இறந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

காதலி உயிரிழந்துவிட்டதாக கருதிய காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு மற்றும் கயல்விழி. வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் மனதார காதலித்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் சம்மதம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே கயல்விழிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க குடும்பத்தினர் ஆரம்பித்துள்ளனர். அதன்படி கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக கயல்விழிக்கு திருமணமும் முடிந்துள்ளது. இதனையடுத்து கணவருடன் சென்னையில் குடியேறினார் கயல்விழி.

திருமணம் முடிந்ததே தவிர கயல்விழிக்கு பிரபுவை அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை. இதனையடுத்து பிரபுவை தொடர் கொண்ட கயல்விழி அவருடன் பேசியதாக தெரிகிறது. இந்நிலையில் பிரபுவுடன் கயல்விழி சென்னையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து மனைவியை காணவில்லை என கயல்விழியின் கணவர் அவரது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கிராமத்தில் கயல்விழி மற்றும் பிரபு இருப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர். அப்போது என்ன செய்வதென்று தெரியாத கயல்விழி, வெறும் ஊசியை கையில் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கயல்விழி மயங்கிக் கிடந்ததை அறிந்த பிரபு, அவர் இறந்துவிட்டார் என்ற சந்தேகத்தில் அங்கிருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் கயல்விழி வெறும் மயக்கத்தில் மட்டுமே இருந்தது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com