ஆபத்தான பைக் சாகசம் : விபரீதம் அறியா இளைஞர்கள்!

ஆபத்தான பைக் சாகசம் : விபரீதம் அறியா இளைஞர்கள்!
ஆபத்தான பைக் சாகசம் : விபரீதம் அறியா இளைஞர்கள்!

ஓசூர் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் தினமும் வீலிங் செய்து கொண்டுதான் செல்கிறர்கள். இத்தகையக ஆபத்தான நிலையில், இருசக்கர வாகனங்களில் வீலீங் செய்துகொண்டு சொல்லும் போது அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை தான் உண்டாகிறது. இதை நகர காவல் துறையினர் கண்டு கொள்வதே இல்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இனியாவது விபத்துகள் ஏற்படும் வகையிலும் மற்றும் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் நபர்களை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி ஆபத்துக்கள் நிகழாத வண்ணம் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் மற்றும் நகர காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com