அரிவாள் வடிவ கேக் வெட்டி கெத்துக்காட்ட நினைத்த இளைஞர்கள்- மொத்தமாக அள்ளிச் சென்ற போலீசார்!

அரிவாள் வடிவ கேக் வெட்டி கெத்துக்காட்ட நினைத்த இளைஞர்கள்- மொத்தமாக அள்ளிச் சென்ற போலீசார்!
அரிவாள் வடிவ கேக் வெட்டி கெத்துக்காட்ட நினைத்த இளைஞர்கள்- மொத்தமாக அள்ளிச் சென்ற போலீசார்!

அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்ட நினைத்த இளைஞர்களை அதிரடியாக போலீசார்  கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் பேருந்து நிறுத்தத்தில் பேரளம் வாய்க்கால் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாதவன். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக பேருந்து நிறுத்தத்தில் வைத்து அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளனர்.

இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பேரளம் போலீஸார், பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டி கெத்துக்காட்டிய அஜய் குமார் (27), மணிகண்டன்(19), விஷ்ணு(19), பிரசாத்(26) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பர்த்டே பாய் மாதவன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அரிவாள் வடிவில் கேக் வெட்டிய இளைஞர்கள் கைது <a href="https://twitter.com/hashtag/Thiruvarur?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Thiruvarur</a> | <a href="https://twitter.com/hashtag/Birthdaycelebration?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Birthdaycelebration</a> | <a href="https://twitter.com/hashtag/Arrest?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Arrest</a> <a href="https://t.co/BBzVWX4bUC">pic.twitter.com/BBzVWX4bUC</a></p>&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) <a href="https://twitter.com/PTTVOnlineNews/status/1553352496294203393?ref_src=twsrc%5Etfw">July 30, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com