அண்ணன், தாய் திட்டியதால் இளைஞர் விபரீத முடிவு - சென்னையில் சோக சம்பவம்

அண்ணன், தாய் திட்டியதால் இளைஞர் விபரீத முடிவு - சென்னையில் சோக சம்பவம்
அண்ணன், தாய் திட்டியதால் இளைஞர் விபரீத முடிவு - சென்னையில் சோக சம்பவம்

சென்னையில் அண்ணன் மற்றும் தாய் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வசித்தவர் சஞ்சய்குமார் (17). தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் பாலாஜி (24) என்பவர் சஞ்சய குமாரின் அக்காவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சஞ்சயின் பெற்றோர் உடனடியாக கடந்த ஜூன் 5ஆம் தேதி வேறு ஒருவருக்கு அவரது அக்காவை திருமணம் செய்து வைத்துள்ளனர். சஞ்சய் குமார் தனது அக்காவுக்கு சிறப்பான முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என சிறு வயதில் இருந்து ஆசைப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கொரோனா காலத்தில் அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்ததில் அவர் மனவேதனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு காரணமான நவீன் பாலாஜி என்பவரிடம் சஞ்சய் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பாலாஜி சஞ்சய்குமார் அண்ணன் விக்னேஷிடம் சென்று தகராறு தொடர்பாக தெரிவித்துள்ளார். 

இதனால் அண்ணன் மற்றும் தாய் ஆகியோர் சஞ்சய்குமாரை கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சஞ்சய்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com