‘இளைஞரின் விபரீத ஆசை’ தர்மஅடி போட்ட பொதுமக்கள்!

‘இளைஞரின் விபரீத ஆசை’ தர்மஅடி போட்ட பொதுமக்கள்!

‘இளைஞரின் விபரீத ஆசை’ தர்மஅடி போட்ட பொதுமக்கள்!
Published on

பெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர்.

வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள பஜார் தெருவுக்கு சென்ற எபினேசன், அங்கு ரூ.650க்கு இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை வாங்கியுள்ளார். அந்த ஆடையை அணிந்துகொண்ட அவர், தனது அம்மாவின் கைப்பையை எடுத்துக்கொண்டு பெண் போல பேருந்து நிலையம் சென்றுள்ளார். பின்னர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டார்.

நடத்துனரிடம் சென்னை செல்ல வேண்டும் என பெண் குரலில் பேசி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, ஒரு பெண்ணிற்கு அருகே அமர்ந்துள்ளார். அவரது குரலைக் கேட்கும் போது நடத்துனருக்கு சற்று சந்தேகம் வந்துள்ளது. பேருந்து பயணம் தொடர, ஒரு கட்டத்தில் காற்று வீசி எபினேசன் அணிந்திருந்த முகத்திரை விலகியுள்ளது. அப்போது அவர் ஆண் என்பதை அறிந்த பக்கத்திலிருந்த பெண், அய்யயோ இது பெண் இல்லை. ஆம்பளை... ஆம்பளை’ எனக் கத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்டு பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் எபினேசனை திருடன் என நினைத்து உதைத்துள்ளனர். 

பின்னர் அவரை பிடித்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் விசாரித்த போது, ‘பெண் போல ட்ரெஸ் பண்ணி பேருந்தில் போகனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த எபினேசனின் உறவினர்கள் மற்றும் பெற்றோரும் அதையே கூறியுள்ளனர். அவரைக் கண்டித்த காவல்துறையினர், ‘ஊரெல்லாம் குழந்தை கடத்தல் என்று மக்கள் புதிய நபர்கள தாக்குறாங்க. நீ பத்திராம இரு தம்பி. இனிமே இப்புடி பண்ணாத’ என்று புத்திமதி கூறி அனுப்பியுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com