டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்

டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்

டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்
Published on

தமிழகத்தில் நேற்று மட்டும் 109.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி மீண்டும் தமிழக்த்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கியது. இதனால் கடந்த சனிக்கிழமை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தது. அப்போது டோக்கன் முறையில் மதுக்கள் விற்பனை செய்யப்பட்டன. சனிக்கிழமை மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை 133.1 கோடிக்கு மது விற்பனை ஆனது.

இந்நிலையில் நேற்றைய மது விற்பனையின் நிலவரம் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் 109.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. நேற்றும் மதுரையே அதிக வசூல் செய்துள்ளது.

சென்னை மண்டலம் - 6.5 கோடி
திருச்சி மண்டலம் - 27.4 கோடி
மதுரை மண்டலம் - 28.6 கோடி
கோவை மண்டலம் - 22.5 கோடி
சேலம் மண்டலம் - 24.3 கோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com