எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

உடல்நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார். அவருக்கு வயது 85.

சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1931ம் ஆம் ஆண்டு பிறந்த அவரின் இயற்பெயர் தியாகராஜன். அவர் எழுதிய தண்ணீர் நாவல் வாசகர்களிடையே பிரபலமானது. அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு 1996ல் சாகித்ய அகாதமி விருதை வென்றவர். தண்ணீர், மானசரோவர், ஒற்றன் உள்ளிட்ட 15 நாவல்களை அவர் எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். சாரல் இலக்கியச் சிந்தனை, அக்சரா உள்ளிட்ட இலக்கிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com