புளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

புளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்
புளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் தில் பல்வேறு படைப்புகளை எழுதியுள்ள இவர், நான் கடவுள், அங்காடித் தெரு, கடல், 2.0, சர்கார் உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடையில் நேற்றிரவு தோசை மாவு வாங்கிச் சென்றார். பின்னர் அது சரியாக புளிக்கவில்லை என்று கூறி கடையில் திருப்பிக் கொடுத்தார். அப்போது கடைக்காரர் செல்வத்துக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிலர் கடைக்காரருடன் சேர்ந்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், கடைக்காரர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com