எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் அம்பை. இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேசிய அவர், 'சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வாசிப்பு குறைந்துள்ளது என்பதைத் தாண்டி வாசிப்பு முறை மாறியுள்ளது'' என்றார். சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் ஏழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com