\
கன்னியாகுமரியில் உலக மீ‌னவர் தின கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் உலக மீ‌னவர் தின கொண்டாட்டம்

கன்னியாகுமரியில் உலக மீ‌னவர் தின கொண்டாட்டம்
Published on

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி தேவால‌யத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி உலக மீனவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இதை கொண்டாடும் வகையில் மணக்குடி கிராமத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.அங்குள்ள  தேவால‌யங்களில் மீனவர்களுக்காக சிறப்பு பிராத்தனைகளும் நடத்தப்பட்டன.மேலும் உலக மீனவர் தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளன.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அதிகளவு மீன்பிடித்துறைமுகங்களை அமைக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலக மீ‌னவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீச்சல் போட்டி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com