அரசு ஊழியர்களுக்கு இனி ரிலாக்ஸ்... வாரத்தில் 5 நாட்களே பணி...!

அரசு ஊழியர்களுக்கு இனி ரிலாக்ஸ்... வாரத்தில் 5 நாட்களே பணி...!
அரசு ஊழியர்களுக்கு இனி ரிலாக்ஸ்... வாரத்தில் 5 நாட்களே பணி...!

தமிழகத்தில் ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஐந்து நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் ஆறு நாள்கள் பணிபுரிய வேண்டும் என கடந்த மே 15 ஆம் தேதியன்று உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் 50 சதவீத ஊழியர்களுக்குப் பதிலாக 100 சதவீத ஊழியர்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.

தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வழக்கமான அலுவலக நேரத்தில் வாரத்தில் 5 நாள்களுக்கு அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அந்த உத்தரவில் தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com