உடைந்திருந்த தடுப்புச் சுவர்: 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு

உடைந்திருந்த தடுப்புச் சுவர்: 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு
உடைந்திருந்த தடுப்புச் சுவர்: 20 அடி உயர மேம்பாலத்தில்  இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு

அம்பத்தூரில் உடைந்த சாலை தடுப்பின் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தச்சுத் தொழிலாளி 20அடி உயரத்தில் இருந்து சர்வீஸ் சாலையில் விழுந்து உயிரிழந்தார்.

சென்னை பம்மல் பொன்னியம்மன் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (50). தச்சுத் தொழிலாளியான இவர், மாதவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தாம்பரம் - புழல் புறவழிச்சாலை, அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் வரும்போது, இவரது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் நிலைதடுமாறியது. இதில் சாலையின் உடைந்த தடுப்பு பகுதியில் இருந்த இடைவெளி வழியாக வாகனத்துடன் முரளிகிருஷ்ணன் 20அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் விழுந்தார்.

இதில், முரளிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் சர்வீஸ் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com