திருமணத்தை மீறிய உறவால் பெண் கொலை?

திருமணத்தை மீறிய உறவால் பெண் கொலை?

திருமணத்தை மீறிய உறவால் பெண் கொலை?
Published on

சேலத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பள்ளப்பட்டியில் ரயில் தண்டவாளத்தின்  அருகே முட்புதரில் பலத்த காயங்களோடு  பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக நேற்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளப்பட்டி போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர்  அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவரின் மனைவி குல்ஜார் என்பது தெரியவந்தது.  

உடற்கூறு ஆய்விற்காக குல்ஜாரின் சடலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்டவாளத்தின் அருகே  சடலம் கிடந்ததால்  ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் குல்ஜார் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  திருமணத்தை மீறிய உறவு காரணமாக கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூன்று பேரை பிடித்து  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com