திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை; ஆர்.டி.ஓ தலைமையில் தீவிர விசாரணை

திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை; ஆர்.டி.ஓ தலைமையில் தீவிர விசாரணை
திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை; ஆர்.டி.ஓ தலைமையில் தீவிர விசாரணை

திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆர்.டி.ஓ விசாரணை நடந்துவருகின்றது.

மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (வயது 27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவர்களில் ராசி கடந்த 2020ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு முதுகலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மருத்துவர் ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ராசி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது தாயார் செந்தாமரை, மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு உள்பக்கம் தாழிட்டிருந்ததால் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்த போது ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் சென்று அறைக்கதவை உடைத்து மருத்துவர் ராசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். திருமணமான 6 வது மாதத்தில் பெண் மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ.விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இளம் மருத்துவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா அல்லது நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் தேர்வு அச்சம் காரணமா என்ற இருவேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com