பெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்

பெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்
பெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரான லதா, தனது மகனின் பிறந்தநாளையொட்டி பூஜை செய்ய நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார். ஆலயத்தில் உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தீட்சிதர் தர்ஷனிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். அப்போது தீட்சிதர் மந்திரம் சொல்லி பூஜை செய்யாமல் அமர்ந்த இடத்தில் இருந்துக் கொண்டே தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பெண்ணை தீட்சிதர் தாக்கியுள்ளார். இதில் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பாக லதா அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com