“வீட்டின் உரிமையாளரே காரணம்” - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

“வீட்டின் உரிமையாளரே காரணம்” - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை
“வீட்டின் உரிமையாளரே காரணம்” - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

சிவகங்கையில் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் திட்டியதால் தனது 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை குறிஞ்சி நகரில் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன், கார்த்திகேயன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இவரது கணவர் பாலமுருகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர், முன்னறிவிப்பின்றி வீட்டை காலி செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக காளீஸ்வரி மனம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன் மீண்டும் காளீஸ்வரியிடம் வீட்டை காலி செய்ய கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த காளீஸ்வரி தனது குழந்தைகள் அபிஷேக் (9) மங்கையர் திலகம் (12) ஆகியோருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகள் இருவரும் விஷம் அருந்திய சிறுது நேரத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவரது உடலையும் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். காளீஸ்வரி உயிரிழப்பதற்கு முன்பு, வீட்டுச் சுவரில் தனது தற்கொலைக்கு காரணம் வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன், நாகஜோதி, மற்றும் சுந்தரி என மூவர் பெயரை குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார். வீட்டு உரிமையாளர்கள் தப்பி சென்ற நிலையில் சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com