விழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..!

விழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..!
விழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..!

விழுப்புரம் சுதாகர் நகரில் வசித்து வந்த இந்திரா என்கிற ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுதாகர் நகரில் வசிப்பவர் இந்திரா. இவரது கணவர் நடராஜன் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நடராஜனுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான இந்திரா விழுப்புரத்திலும் மற்றொரு மனைவி திருக்கோவிலூரிலும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திராவிற்கும் நடராஜனுக்கும் பிறந்த மகன் கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது தற்கொலை செய்துகொண்டு இறந்து போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியிலுள்ள சொந்த வீட்டில் நடராஜனும் இந்திராவும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே இந்திராவின் கணவர் நடராஜன், நேற்று அவரின் இரண்டாவது மனைவியை காண திருக்கோவிலூர் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவர் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ரத்தக் காயங்களுடன் உடலின் ஒருபகுதி எரிந்த நிலையில் இந்திரா வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அறிந்த நடராஜன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனையடுத்து காவல்துறையினர் மோப்ப நாயைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர்.  பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சில தடயங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.  மேற்கொண்டு நடராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com