“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா

“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா

“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா
Published on

திருவேற்காட்டில் பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஆட்டோவில் தங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவடியை சேர்ந்தவர் மஞ்சு(32). இவருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த அரிபிரசாத்(34) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரக்சன்(2), என்ற மகன் உள்ளார். 

இந்த நிலையில், தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மஞ்சு, கடந்த சில தினங்களாக அவரது வீடு உள்ள தெருவில் ஆட்டோவில் தங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தனியார் திருமண தகவல் மையம் மூலம் எனக்கு திருமணம் நடைபெற்றது. வட மாநிலத்தைச் சேர்ந்த எனது கணவருடன் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த வேலையில், அவரது தாய் பேச்சை கேட்டு தன்னை துன்புறுத்தி வந்தார். 

இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது பிடிக்கவில்லை என்று கூறி விட்டு அவரது தாயுடன் வசித்து வருகிறார். மேலும், தன்னை விவாகரத்து செய்யப் போவதாக கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கணவருடன் சேர்த்து வைக்க கோரி இங்கு வந்த போது என்னை வீட்டில் சேர்க்கவில்லை. இதனால் ஆட்டோவில் கடந்த சில தினங்களாக எனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். 

இங்குள்ளவர்கள் எனக்கு ஆதரவு அளித்து எனது மகனுக்கு உணவு தருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் போலீசார் புகாரை ஏற்க வில்லை. இங்குள்ள வீட்டை இன்னும் 2 மாதங்களில் காலி செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கு செல்வார்கள் என தெரியாது. எனவே தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com