இளைஞர் தள்ளிவிட்டதில் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு?

இளைஞர் தள்ளிவிட்டதில் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு?

இளைஞர் தள்ளிவிட்டதில் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு?
Published on

சென்னை எண்ணூரில் ரயிலில் இருந்து கீழே விழுந்த வடமாநில பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞர் ஒருவர் தள்ளிவிட்டதாலேயே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட ஹவுரா விரைவு ரயில் எண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில் அதில் ஏறுவதற்கு, வட மாநில பெண் ஒருவர் முயன்றிருக்கிறார். ஆனால், படியில் இருந்து பயணித்த நபர் ஒருவர், அப்பெண்ணிற்கு வழிவிடாமல் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்க உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் ரயில் நிலையத்திலேயே, அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரயில் பயணிகள் அங்குள்ள ரயில் பாதுகாப்பு படை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதற்கிடையில் தள்ளிவிட்டதாக கூறப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com