சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், காலை 10 மணியளவில் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் நாளை மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6ம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து டிசம்பர் 7ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.