ஆருத்ரா மோசடியால் சிதைந்த குடும்பம்.. தாயின் 16ம் நாள் காரியம் முடிந்தவுடன் மகனும் தற்கொலை

ஆருத்ரா மோசடியால் சிதைந்த குடும்பம்.. தாயின் 16ம் நாள் காரியம் முடிந்தவுடன் மகனும் தற்கொலை
ஆருத்ரா மோசடியால் சிதைந்த குடும்பம்.. தாயின் 16ம் நாள் காரியம் முடிந்தவுடன் மகனும் தற்கொலை

காஞ்சிபுரம் அருகே நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு வந்துள்ளார். விஜயபாஸ்கரை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், முதலீடு செய்த பொதுமக்கள் அவ்வப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட விஜயபாஸ்கரின் தாய் செண்பகம் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு 16 ஆம் நாள் காரியம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் வரும் 1 ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்ட விஜயபாஸ்கர், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமலும், தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளை பணமின்றி செய்ய முடியாமலும், தாய் இறந்து போன துக்கத்திலும் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மன அழுத்தத்தில் இருந்து வந்த விஜயபாஸ்கர் இன்று பிற்பகல் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த அறிந்த அக்கம் பக்கத்தினர் பாலு செட்டி சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், விஜய பாஸ்கரின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயபாஸ்கரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com