தொல்லியல் அலுவலர் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தொல்லியல் அலுவலர் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ தமிழ் வழியில் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வான 18 மாணவர்களும் தமிழத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழக அரசின் தொல்லியல் துறையில் முதுகலை பட்டயப்படிப்பை முடித்த மாணவி ஒருவரும் தேர்வுப் பட்டுள்ளார்” என்று விளக்கம் அளித்துள்ளது.