இரட்டை இலையை எப்பாடுபட்டாவது மீட்போம்: ஓ.பன்னீர்செல்வம்

இரட்டை இலையை எப்பாடுபட்டாவது மீட்போம்: ஓ.பன்னீர்செல்வம்
இரட்டை இலையை எப்பாடுபட்டாவது மீட்போம்: ஓ.பன்னீர்செல்வம்

இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை, தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலைச் சின்னம் கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கட்சியையும், ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக தொண்டர்கள் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com