அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: அமைச்சர் பதவியை இழக்கிறாரா? #Video
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். இந்நிலையில், அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது. இதற்கிடையே, அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஒரு அமைச்சராக இருப்பவர் கைது செய்யப்படும் போது, அவர் அமைச்சர் என்ற தகுதியை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரது துறையை வேறொருவருக்கு அவரேவும் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதுபோன்ற காரணங்களால், தானாகவே செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இழக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுபற்றி விரிவாக, இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.